கொழும்பு: இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கொழும்பு அருகே உள்ள புத்தர் கோவிலில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
தமது இளைய சகோதரரும் இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றார் மகிந்த. அவரது கட்சி, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 தொகுதிகளில் 145 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
அவரது தலைமையிலான அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் எனத் தெரிகிறது.

