பெய்ரூட்: நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பலி வாங்கிய பெய்ரூட் வெடிப்பு சம்பவத்திற்கு லெபனான் அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் என்று கூறி அந்நாட்டு மக்கள் பலர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றுமுன்
தினம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது பெய்ரூட்டிலுள்ள அரசாங்க அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வெளியுறவு, எரிசக்தி, பொருளாதார அமைச்சுகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சேதப்படுத்தினர்.
அப்போது தங்களைத் தடுக்க முயன்ற போலிசார் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடு
பட்டதால், சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்
களால் துரத்தப்பட்ட போலிஸ்காரர் ஒருவர் மின்தூக்கியின் சுழல் தண்டுக்குள் சிக்கி மாண்டார்.
இதற்கிடையே ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லெபனான் பிரதமர் ஹசன் தியாப், இந்த குழப்பமான சூழ்நிலையிலிருந்து வெளிவர முன்கூட்டியே தேர்தலை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
பெய்ரூட் நகரின் கிடங்கு ஒன்றி லிருந்த 2,000 டன்களுக்கும் அதிகமான அமோனியம் நைட்ரேட் கடந்த செவ்வாய்க்கிழமை வெடித்ததில் 158 பேர் மாண்டனர், 6,000த்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

