பிரேசிலியா: பிரேசிலில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 4 மாதங்களில் சுமார் நூறாயிரம் பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். அங்க ஒவ்வோர் நாளும் சராசரியாக ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், “கொரோனா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தாதது, மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதது அதிக உயிரிழப்புக்குக் காரணமாகும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மருத்துவ வல்லுநர்களும் அறிவியல் ஆய்வாளர்களும், “மருத்துவக் கட்டுப்பாடுகளுக்கு அரசுத் தரப்பிலிருந்தே போதுமான ஒத்துழைப்பு இல்லை.
“ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் விரைவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள்,” எனக் கவலைத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பிரேசிலில் கொரோனாவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தார்கள் என்பது மிகமிகக் குறைவு என்றும் உண்மையான தகவல்களை அரசு மறைப்பதாகவும் பிரேசில் தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலகளவில் பாதிப்பு, உயிரிழப்பு என இரண்டிலும் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது, 165,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தியா 3வது இடத்தில் உள்ளது.