வெலிங்டன்: நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பிறகு நேற்று சமூக நிலையில் புதிதாக கிருமித்தொற்று தலைகாட்டியதை அடுத்து கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வரும் என்று பிரதமர் ஜெசிகா ஆர்டன் நேற்று அறிவித்தார்.
தெற்கு ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆக்லாந்தில் மூன்றாம் நிலை கட்டுப்பாடுகள் மூன்று நாட்களுக்கு நடப்பில் இருக்கும் என்றும் நாட்டின் இதர பகுதிகளில் இரண்டாம் நிலை கட்டுப்பாடுகள் இருந்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.