அம்னோ, பாஸ் கட்சி அணியில் பெர்சத்து சேரும்

அம்னோ, பாஸ் கட்சி அணியில் பெர்சத்து சேரும்

3 mins read
e45fdd66-30ca-49d8-836e-6de222a95677
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் ஆளும் கட்­சி­யான பெர்­சத்து, முஃபாகத் நேஷ­னல் கூட்­ட­ணி­யில் (எம்­என்) முறைப்படி சேர்ந்­து­கொள்­ளும் என்று பிர­த­மர் முகை­தீன் யாசின் அறி­வித்து இருக்­கி­றார்.

அந்­தக் கூட்­ட­ணி­யில் நாட்­டின் ஆகப் பெரிய மலாய் முஸ்­லிம் கட்சி ­க­ளான அம்­னோ­வும் பாஸ் கட்சி­யும் இடம்­பெற்­றுள்­ளன.

ஆளும் பெர்­சத்து கட்­சி­யின் தலை­வ­ரான முகை­தீன், கட்சி உறுப்­பி­னர்­க­ளி­டையே பேசி­னார். முஃபாகத் நேஷ­னல் கூட்­ட­ணி­யில் தன்­னு­டைய கட்சி சேர்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் விரை­வில் பூர்த்தி செய்­யப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

முஃபாகத் நேஷ­னல் அணி­யில் சேர்­வ­து­தான் ஆளும் பெர்­சத்து கட்­சி­யைப் பொறுத்­த­வரை­யில் தலை­ சி­றந்­த­தாக இருக்­கும் என்று தான் நம்­பு­வ­தாக முகை­தீன் குறிப்­பிட்­டார். இந்­தக் கூட்­ட­ணியை 2018ல் அம்­னோ­வும் பாஸ் கட்­சி­யும் சேர்ந்து உரு­வாக்­கின.

அம்னோ, பாஸ் மற்­றும் இதர கட்­சி­க­ளு­டன் சேர்ந்து இருப்­ப­தால் பெரும்­பா­லான மக்­க­ளின் ஆத­ரவு நமக்கு இருக்­கும் என்று நம்­பு­வ­தா­க­வும் நேற்று முகை­தீன் குறிப்­பிட்­டார். நாட்­டில் அர­சி­யல் நிலைத்­தன்மை ஏற்­பட இந்த ஏற்­பாடு வழி­வ­குக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஆளும் தேசிய கூட்­ட­ணி­யில் ( பிஎன்) முறை­யா­கச் சேர்ந்­து­கொள்­ளும் எண்­ணம் தனக்கு இல்லை என்­றும் அதற்­குப் பதி­லாக முஃபாகத் நேஷ­னல் அணியை பலப்­ப­டுத்துவதையே தான் விரும்­பு­வ­தா­க­வும் அம்னோ அறி­வித்­தது.

இதற்கு சில வாரங்­கள் கழித்து பிர­த­மர் முகை­தீ­னின் அறி­விப்பு இப்­போது இடம்­பெ­று­கிறது.

மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது புதி­தாக கட்சி ஒன்றை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றார்.

பெர்­சத்து கட்­சி­யில் இருந்த பல­ரும் மகா­தீர் கட்­சிக்­குத் தாவி இருக்­கி­றார்­கள். இந்த நிலை­யில் பிர­த­ம­ரின் அறி­விப்பு இடம்­பெ­று­கிறது. டாக்­டர் மகா­தீர், 95, திரு முகை­தீ­னு­டன் சேர்ந்து 2016ல் பெர்­சத்து கட்­சியை ஏற்­ப­டுத்­தி­னார்.

ஆனால் சென்ற பிப்­ர­வ­ரி­யில் பிர­த­மர் பத­வி­யில் இருந்து டாக்­டர் மகா­தீர் வில­கி­ய­தைத் தொடர்ந்து பெர்­சாத்து உடைந்­தது.

டாக்­டர் மகா­தீர் தலை­மை­யில் ஆட்சி புரிந்த பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யில் இருந்து திரு முகை­தீன் தலை­மை­யி­லான பெர்­சாத்து அணி விலகி அம்னோ, பாஸ் மற்­றும் இதர கட்­சி­க­ளு­டன் சேர்ந்து புதிய தேசிய கூட்­டணி (பிஎன்) அரசை அமைத்­தது.

இப்­படி கட்சி மாறு­வதை டாக்­டர் மகா­தீர் ஏற்­க­வில்லை. பிறகு பெர்­சத்­து­வில் இருந்து டாக்­டர் மகா­தீ­ரும் அவ­ருக்கு ஆத­ர­வான ஐந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

இத­னி­டையே, டாக்­டர் மகா­தீர் எற்­ப­டுத்தி இருக்­கும் புதிய கட்சி, பேராக்­கில் நடக்­க­வி­ருக்­கும் இடைத்­தேர்­த­லில் முதன்­மு­த­லாக களம் காணு­கிறது என்று ஊட­கத் தகவல்­நேற்று தெரி­வித்­தன.

அந்த மாநில சட்­ட­மன்­றத்­திற்­கான சிலிம் தொகுதி இடைத்­தேர்­த­லில், அம்னோ வேட்­பா­ள­ருக்­கும் சுயேச்சை வேட்­பா­ளர்­கள் இரண்டு பேருக்­கும் இடை­யில் மும்­மு­னைப் போட்டி இருக்­கும்.

சுயேச்சை வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான இஸ்­லா­மிய வழக்­க­றி­ஞர் அமிர் குஷ்­யாய்ரி முகம்­மது தனுசி, 38, என்­ப­வர் டாக்­டர் மகா­தீ­ரின் கட்­சி­யைப் பிர­தி­நி­திப்­பார்.

இருந்­தா­லும் டாக்­டர் மகா­தீ­ரின் கட்சி இன்­ன­மும் அதி­கா­ர­பூர்­வ­மா­கப் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தால் அவர் சுயேச்­சை­யா­கப் போட்டி­யி­டு­வார்.

அம்னோ வேட்­பா­ள­ரான முகம்­மது அஜிஸ், 43, தேசிய கூட்­டணி சார்­பில் களம் காண்­பார். முன்­னாள் ஆசி­ரி­ய­ரான எஸ். சந்­தி­ர­சே­க­ரன், 45, மற்­றொரு சுயேச்சை வேட்­பா­ள­ராக அந்த இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டு­வார்.

இடைத்­தேர்­தல் 14 நாள் பிர­சா­ரத்­திற்­குப் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடக்­கிறது.