கொவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பினாங்கில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை

கொவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பினாங்கில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை

2 mins read
215670c9-e197-4159-a007-b36df566702e
பினாங்கு தீவின் தெற்கில் உள்ள தெலுக் கும்பார் நகரில் உள்ள இந்த உணவகத்தில் மதிய வேளையாக இருந்தும் வாடிக்கை யாளர்கள் வராத நிலையைக் காண முடிகிறது. படம்: தி ஸ்டார் -

ஜார்ஜ்டவுன்: மலே­சி­யா­வின் பினாங்கு மாநி­லத்­தில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் மீண்­டும் அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் உள்­ள­தால், அம்­மா­நி­லத்­தின் சில பகு­தி­களில் கடு­மை­யான கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் அமல்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

பினாங்­கில் 100 நாட்­க­ளுக்கு மேல் கொவிட்-19 சம்­ப­வங்­கள் இல்­லாத போக்கு நிலவி வந்த வேளை­யில், சமூ­கத்­தில் புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் தலை­யெ­டுத்­தி­ருப்­ப­தால் உள்­ளூர் சுகா­தார அமைப்­பு­களும் நகர மன்­றங்­களும் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கட்­டுப்­பாட்­டு­க­ளைக் கடு­மை­யாக்கி­உள்­ளன.

சாலை­யோ­ரத்­தில் உள்ள கடை­களில் அமர்ந்து உண்ண அனு­மதிக்­கப்­ப­டாது. வாடிக்­கை­யா­ளர்­கள் உண­வைப் பொட்­ட­லம் கட்டி எடுத்­துச் சொல்ல அனு­ம­திக்கப்­ப­டு­வார்­கள்.

உண­வகங்­களும் காப்­பிக் கடை­களும் நடப்­பில் உள்ள கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டித்­தால் அங்கு வாடிக்­கை­யா­ளர்­கள் அமர்ந்து உண­வுண்­ண­லாம்.

கும்­ப­லாக ஒன்று சேர்­வ­தும் தடை செய்­யப்­படும்.

பினாங்கு தீவின் தெற்­கில் உள்ள தெலுக் கும்­பார், சுங்கை பத்து, கெர்­தாக் சங்­குல் ஆகிய இடங்­க­ளி­லும் பினாங்கு பெரு­நிலத்­தில் உள்ள மத்­திய மற்­றும் தெற்கு செப­ராங் பிறை ஆகிய வட்­டா­ரங்­க­ளி­லும் இந்­தக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­படுத்­தப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தெலுக் கும்­பா­ரில் உள்ள தாமான் சஹா­பாட்­டில் நடத்­தப்­படும் இர­வுச் சந்­தை­யும் இப்­போ­தைக்கு மூடப்­ப­டு­கிறது என்­றும் காலை­யில் செயல்­படும் சந்­தை­யில் கட்­டுப்­பாடு­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்­றால் அது­வும் மூடப்­படும் என்றும் பினாங்கு தீவின் நகர மன்­றம் எச்­ச­ரித்­துள்­ளது.

தாமான் சஹா­பாட்­டில் வசிக்­கும் 58 வயது பெண்­ கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ளார் என்று கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்­யப்­பட்­டது.

அந்­தப் பகு­தியே வெறிச்­சோடி காணப்­ப­டு­கிறது என்­றும் ஒரு­சில கடை­களே அங்கு திறந்­துள்­ளன என்­ற­போ­தி­லும் அங்கு ஆள்­ந­ட­மாட்­டம் மிக­வும் குறைந்­து­விட்­டது என்­றும் கூறப்­பட்­டது.