தொடர் மழை: 60,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

தொடர் மழை: 60,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

1 mins read
fbfc1756-4f92-4572-9f90-23e2015605d7
சீனாவின் சிச்சு­வான் மாநிலத்தில் நேற்று காலை வரை மழை தொடர்ந்­த­தன் கார­ண­மாக மாநி­லத்­தில் உள்ள 31 ஆறு­கள் அபா­ய­கட்­டத்தை எட்­டி­ன. படம்: ஏஎப்பி -

செங்டு: கன­மழை கார­ண­மாக தென்­மேற்கு சீன மாநி­ல­மான சிச்சு­வான் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு உள்­ளது. 60,000க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் அவர்­க­ளின் வீடு­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டு நிவா­ரண முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்டு உள்­ள­தாக உள்­ளூர் அதி­கா­ரி­கள் நேற்று கூறி­ய­தாக சின்­ஹுவா செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்­டது. சனிக்­கி­ழமை காலை 8 மணிக்கு தொடங்­கிய மழை கடு­மை­யா­கப் பெய்­தது.

மேலும் நேற்று காலை வரை மழை தொடர்ந்­த­தன் கார­ண­மாக மாநி­லத்­தில் உள்ள 31 ஆறு­கள் அபா­ய­கட்­டத்தை எட்­டி­ன. இருந்­த­போ­தி­லும் யாரும் மர­ண­ம­டை­யவோ காண­மற்­போ­கவோ இல்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர். சனிக்­கிழமை மாலை அந்த மாநி­லத்­தில் மஞ்­சள் எச்­ச­ரிக்கை அறி­விக்­கப்­பட்­டது.