ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று புதிதாக 2,081பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் கொவிட்-19 அரசாங்க பணிக் குழு தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் 79 பேர் மாண்டுவிட்டதாகவும் அதன் அறிக்கை குறிப்பிட்டது. உலகின் நான்காவது பெரிய மக்கள்தொகை நாடான இந்தோனீசியாவில் நேற்றைய எண்ணிக்கையையும் சேர்த்து 139,549 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை இந்தோனீசியா வில் 6,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் உயிரிழந்து விட்டனர்.

