தடுப்பு மருந்தை பகிர்ந்து கொள்க

தடுப்பு மருந்தை பகிர்ந்து கொள்க

2 mins read
250258a7-c037-4cd7-a83a-1a444d89bb07
மில்லியன் கணக்கான மக்களுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து இந்த ஆண்டுக்குள் தயாரிக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டிறுதிக்குள் இரண்டு பில்லியன் மக்களுக்கு செலுத்தக்கூடிய அளவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சௌம்யா சுவாமிநாதன் இன்று (ஜூன் 18) தெரிவித்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜெனிவா: கொரோனா தடுப்­பூசி பகிர்வு திட்­டத்­தில் உலக நாடு­கள் விரை­வாக சேரு­மாறு வலி­யு­றுத்தி உலக சுகா­தார அமைப்பு ஒவ்­வொரு நாட்­டிற்­கும் கடி­தம் அனுப்­பி உள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்ள உலக மக்­கள் அனை­வ­ருக்­கும் ஒரே நேரத்­தில் தடுப்பு மருந்து கிடைக்க வில்லை எனில், உலக பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்க முடி­யாது என்று கூறி­யுள்­ளார் உலக சுகா­தார அமைப்­பின் தலை­வர் டெட்­ரோஸ் அதா­னோம்.

பாது­காப்­பான தடுப்பு மருந்து கிடைத்­த­வு­டன் உலக சுகா­தார அமைப்­பின் தலை­மை­யி­லான 'கோவேக்ஸ்' எனப்­படும் தடுப்பு மருந்து பகிர்வு திட்­டத்­தின்­படி, ஒவ்­வொரு நாட்­டி­லும் உள்ள முன்­கள சுகா­தார ஊழி­யர்­கள், 65 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள் மற்­றும் ஏற்­கெ­னவே உடல்­ந­லம் குன்­றி­ய­வர்­க­ளுக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து வழங்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

"கொரோனா தொற்றை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்­கும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கு­மான மிக விரை­வான வழி என்­ன­வென்­றால், சில நாடு­க­ளின் ஒட்­டு­மொத்த மக்­கள்­தொ­கைக்­கும் தடுப்பு மருந்து தரு­வ­தை­விட அனைத்து நாடு

களி­லும் உள்ள எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளுக்­கு முத­லில் தடுப்பு மருந்து கொடுத்து பாது­காப்­ப­து­தான்," என்று டெட்­ரோஸ் கூறி­னார்.

'கோவேக்ஸ்' திட்­டத்­தில் இணைய இது­வரை 92 நாடு­கள் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தா­க­வும் மேலும் 80 நாடு­கள் இத்­திட்­டத்­தில் இணைய ஆர்­வம் காட்­டு­கின்­றன.

இம்­மா­தம் 31ஆம் தேதிக்­குள் இத்­திட்­டத்­தில் உலக நாடு­கள் சேரு­மாறு சுகா­தார அமைப்பு வலி­யு­றுத்­து­கிறது.

உலக நாடு­கள் கொரோனா தொற்­றுக்கு இது­வரை 775,000 பேரைப் பலி­கொ­டுத்­துள்­ளன.

22 மில்­லி­யன் பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். இதற்­கி­டையே, அஸ்ட்­ரா­ஜெ­னெகா-ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தால் உரு­வாக்­கப்­பட்ட தடுப்பு மருந்து தயா­ரிப்­ப­தற்­கான ஒப்­பந்­தம் கிடைத்த பிறகு பேசிய அந்­நாட்டு பிர­த­மர் மோரி­சன், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் 25 மில்­லி­யன் மக்­க­ளுக்­கும் இல­வ­ச­மாக தடுப்­பு மருந்து வழங்­கப்­படும் என்­றும் சொன்­னார்.