தனிமைப்படுத்தல் உத்தரவு மீறல்; சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

தனிமைப்படுத்தல் உத்தரவு மீறல்; சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

1 mins read
4f8835f8-4f25-4d00-820f-a252985a7468
மலே­சி­யா­வின் தோட்டம், கைத்­தொ­ழில், பொருட்­கள் துறை அமைச்­ச­ரும் பாஸ் கட்சி உறுப்­பி­ன­ரு­மான கைரு­தீன் அமன் ரசாலி. படம்: டாக்டர் கைருதீன், ஃபேஸ்புக் -

கோலா­லம்­பூர்: வெளி­நாட்­டிற்­குச் சென்று திரும்­பிய மலே­சிய அமைச்­சர் ஒரு­வர் கட்­டாய தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ர­வைக் கடைப்­பி­டிக்கத் தவ­றி­ய­தால், சர்ச்­சை­யில் சிக்­கி­யுள்­ளார்.

துருக்கி சென்­று­விட்டு ஜூலை 7ஆம் தேதி நாடு திரும்­பிய மலே­சி­யா­வின் தோட்டம், கைத்­தொ­ழில், பொருட்­கள் துறை அமைச்­ச­ரும் பாஸ் கட்சி உறுப்­பி­ன­ரு­மான கைரு­தீன் அமன் ரசாலி, ஜூலை 13ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­திற்­குச் சென்­றது குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் தெரேசா கோக் கேள்வி எழுப்­பி­னார்.

நாடு திரும்­பி­ய­வு­டன் பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்று தெரிய வந்த சில­ருக்குப் பின்னர் தொற்று உறுதி செய்­யப்­பட்டதைச் சுட்டிய அவர், எனவே 14 நாள் கட்­டாய தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ரவு அமைச்­சர் உட்­பட அனை­

வ­ரா­லும் கடை­ப்பி­டிக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

"எனவே கொவிட்-19 குற்­றங்­க­ளுக்கு எதி­ராக தேசிய பாது­காப்பு மன்­றம் இரட்டை நிலைப்­பாட்டை கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதை நிரூ­பிக்க நீதி­மன்­றம் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இதற்­கி­டையே, தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ர­வில் இருந்த 81 வயது ஆட­வர் ஒரு­வர் இரு­மிக் கொண்டே புகார் அளிப்­ப­தற்­காக செந்­தூல் மாவட்ட காவல் நிலை­யத்­திற்­குச் சென்­ற­தை­ய­டுத்து காவல்­நி­லை­யத்­தின் ஒரு பகுதி மூடப்­பட்­டது. கிருமி

­நா­சினி தெளிக்­கும் பணிக்­குப் பிறகு நேற்று மாலை 4 மணிக்கு காவல்நிலையம் வழக்கம் போல் இயங்கவிருந்ததாகக் கூறப்பட்டது.