வெலிங்டன்: கிருமிப் பரவலை மேலும் கட்டுப்படுத்தும் விதமாகத் தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரை மேலும் அதிகரிக்கப் போவதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் ஏற்கெனவே 1,200 ராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 500 ராணுவத்தினர் ஈடுபடவுள்ளனர்.
மக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இவர்கள் உதவுவார்கள்.
நேற்று நியூசிலாந்தில் ஐந்து கிருமித்தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவாகின. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 13ஆக இருந்தது.
கிருமித்தொற்றின் இரண்டாவது அலை தலைதூக்கியதையடுத்து, அங்குப் பொதுத்தேர்தல் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

