பிலிப்பீன்சை உலுக்கிய இரட்டை குண்டுவெடிப்பு; 15 பேர் பலி

பிலிப்பீன்சை உலுக்கிய இரட்டை குண்டுவெடிப்பு; 15 பேர் பலி

2 mins read
30837a6f-59b8-45cb-91d8-5d4664ab9bbe
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பிலிப்பீன்ஸ் ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். படம்: ஏஎஃப்பி -

மணிலா: தெற்கு பிலிப்­பீன்­சின் ஜோலோ நக­ரில் நடந்த இரட்டைக் குண்­டு­வெ­டிப்­பில் 15 பேர் கொல்­லப்

­பட்­ட­னர்.

தெற்கு பிலிப்­பீன்­சின் ஜோலோ நக­ரில் உள்ள வணிக கட்­ட­டத்­திற்கு முன் நிறுத்­தப்­பட்­டி­ருந்த ராணுவ வாக­னத்­தைக் குறி­வைத்து முதல் குண்­டு­வெ­டிப்பு நடத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

நேற்று பக­லில் நடந்த இந்த சம்­ப­வத்­தில் ஆறு ராணுவ வீரர்­களும் ஆறு பொது­மக்­களும் பலி­யா­ன­தா­க­வும் 16 வீரர்­கள் காய­ம­டைந்­த­தா­க­வும் தி ஸ்ட்­ரைட்ஸ் டைம்ஸ் செய்தி கூற­கிறது.

இதைத்­தொ­டர்ந்து மதி­யம் 1 மணி­ய­ள­வில் முதல் குண்­டு­வெ­டிப்பு நடந்த இடத்­திற்கு அருகே மற்­றோர் தெரு­வில் இரண்­டா­வது குண்­டு­வெ­டிப்பு நிகழ்ந்­தது.

குண்­டு­வெ­டிப்பை நிகழ்த்­தி­ய­தா­கக் கரு­தப்­படும் பெண் ஒரு­வ­ரும் ராணுவ வீரர் மற்­றும் போலிஸ்­கா­ரர் ஒரு­வ­ரும் மாண்­ட­னர்.

இத்­தாக்­கு­தல்­க­ளுக்கு எந்­த­வொரு தீவி­ர­வாத அமைப்­பும் உட­ன­டி­யாக யாரும் பொறுப்­பேற்­கவில்லை.

இது தற்­கொலை படைத் தாக்கு­த­லாக இருக்­கக்­கூ­டும் என்று பிலிப்­பீன்ஸ் உயர் ராணுவ அதி­காரி வின்­லுன் சொன்­னார்.

சம்­ப­வத்­திற்கு முன்­பாக, ராணுவ வீரர் ஒரு­வர் அங்கு இருந்த ஒரு பெண்ணை அணுக முயன்­ற­போது, அவர் குண்டை வெடிக்­கச் செய்­த­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்­களை மேற்­கோள்­காட்டி அவர் சொன்­னார்.

இத்­தாக்­கு­தல்­கள் அபுசாயஃப் தீவி­ர­வா­தக் குழு­வின் வேலை­யாக இருக்­க­லாம் என்­றும் அவர் சொன்­னார். மேலும் இத்­தீ­வி­ர­வாதக் குழு­வின் தலை­வ­னான ஹதிப் சவட்­ஜா­னின் மரு­ம­கன் முண்டி சவட்­ஜான் அண்­மைய தாக்­கு­தல்­களில் முக்­கிய சந்­தேக நப­ராக கரு­தப்

­ப­டு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

கடந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் இதே ஜோலோ நக­ரில் உள்ள ஒரு கத்­தோ­லிக்க தேவா­ல­யத்­தைக் குறி­வைத்து நடத்­தப்­பட்ட இரட்டை தற்­கொலை குண்­டு­வெ­டிப்பு தாக்­கு­தல்­களில் சுமார் 23 பேர் கொல்­லப்­பட்­ட­னர். 100க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.