ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை முதல் அங்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று முடிவடையவிருந்த கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு நாட்களுக்கு அதாவது வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கைபெருமளவு அதிகரிக்கவில்லை என்றால், உணவகங்களில் உணவருந்துவதற்கான நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணியாக நீட்டிக்கப்படும். மேலும் ஒவ்வோர் மேசையிலும் இருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவர்.
திரையரங்குகள், அழகு நிலையங்கள், சில விளையாட்டு கூடங்களும் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது இடங்கள், பூங்காக்களில் உடற்பயிற்சி செய்வோர் தவிர மற்றவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயமாகவே நீடிக்கிறது.
தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, என்றாலும் கிருமித்தொற்றிலிருந்து ஹாங்காங் முற்றிலும் விடுபடவில்லை என்று சொன்னார் உணவு மற்றும் சுகாதார செயலாளர் சோபியா சான்.
"கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு உள்ளூர் கிருமிப் பரவல் எண்ணிக்கை குறையும் வரை காத்திருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று," என்றும் அவர் சொன்னார்.

