பாரிஸ்: பிரெஞ்சு அரசாங்கம் அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று பொருளியல் மீட்புத் திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது.
கொரோனா கிருமித்தொற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க பிரெஞ்சு அரசாங்கம் முயன்று வருகிறது.
கலைகள், கலாசாரம் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்க இந்தத் திட்டம் மூலம் $3.2 பில்லியன் வழங்கப்படும். மீட்புத் திட்டத்துக்காக $160 பில்லியன் ஒதுக்கப்படுகிறது.

