ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் மிகப்பெரிய மருந்து நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் பில்லியன் கணக்கான தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ள நிலையில், ஏழை நாடுகள் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், பி.வி.கல்பே ஃபார்மா என்ற அந்நிறுவனத்தின் தென்கொரிய பங்காளியான ஜெனெக்சின் நிறுவனம் முதல் கட்ட பரிசோதனைகளை அக்டோபர் மாதம் முடிக்க உள்ளதாகவும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு
வதாகவும் கல்பே நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.
இரண்டாவது கட்ட பரிசோதனை மே 2021ல் முடிவடையும் என்றும் அதில் இந்தோனீசியாவிலிருந்து மட்டும் சுமார் 600 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை வாங்கத் திட்டமிட்டுள்ள கல்பே, ஆண்டிற்கு 30 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. இந்தோனீசியாவில் நேற்று முன்தினம் ஆக அதிகமாக 2,719 தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன.

