இந்தோனீசியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கிருமித்தொற்று

இந்தோனீசியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கிருமித்தொற்று

1 mins read
81239037-4f6a-4a28-b84d-36a8d97fc20f
இந்தோனீசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள மேடான் நகரில் உள்ள கொரோனா தொற்று சோதனை நிலையத்தில் எச்சில், சளி மாதிரி பரிசோதனைக்காக மூதாட்டி ஒருவரை கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர். படம்: இபிஏ -

ஜ­கார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் வேக­மாக பர­வக்­கூ­டிய உரு­மாற்­றம் அடைந்த புதிய வகை கொரோனா கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக ​​ஜகார்த்­தாவை தள­மா­கக் கொண்ட மூலக்­கூறு உயி­ரி­ய­லுக்கான மையம் நேற்று தெரி­வித்­தது.

இந்த மையத்­தால் சேக­ரிக்­கப்­பட்ட மாதி­ரி­களில் D614G என்ற உரு­மாற்­றம் அடைந்த கொரோனா கிருமி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இந்­தோ­னீ­சி­யா­வில் சில நாட்­க­ளாக தொற்று அதி­க­ரிப்­ப­தற்­குக் கார­ணம் இது­வாக இருக்­கக்­கூ­டுமோ என்­றும் மையம் ஆராய்ந்து வரு­கிறது. இந்த கிருமி ஏற்­கெ­னவே மலே­சிய மாதி­ரிக­ளி­லும் இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டது. இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று 2,858 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, மொத்­த­மாக 172,053 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், 7,343 பேர் மாண்­டனர்.