இந்தோனீசியாவில் தேவைக்கு அதிகமான கோழிகள் இருப்பதால் அவற்றின் விலை சரிந்துள்ளது.
இதைச் சரிசெய்ய மில்லியன் கணக்கான கோழி, வாத்துகளை அழிக்க இந்தோனீசியாவின் விவசாயத்துறை அமைச்சு முடிவெடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாது, முட்டைகளிலிருந்து கோழிக் குஞ்சுகளைப் பொரிப்பதையும் குறைக்குமாறு கோழிப் பண்ணை வைத்திருப்போருக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.