6,000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்கியதா? 42 பேரைக் காணவில்லை

6,000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்தது

பூசன்: நியூசிலாந்தில் இருந்து சீனாவிற்கு 5,867 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

‘தி கல்ஃப் லைவ்ஸ்டாக் 1’ என்ற அக்கப்பல் கடந்த மாதம் 14ஆம் தேதி நியூசிலாந்தின் நேப்பியரில் இருந்து கிளம்பியது. 17 நாட்கள் பயணம் செய்து சீனாவின் ஜின்டாங் துறைமுகத்தை அடைய அது திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிழக்கு சீனக் கடல் பகுதியில் இருந்தபோது, மேசக் சூறாவளி அக்கப்பலை அலைக்கழித்தது. இதையடுத்து, உதவி கோரி அழைப்பு வர, ஜப்பானிய கடற்படை அப்பகுதிக்கு விரைந்தது.

கடலில் தத்தளித்தபடி இருந்த சரெனோ எட்வரொடோ எனும் 45 வயது பிலிப்பீன்ஸ் ஊழியர் மீட்கப் பட்டார். அக்கப்பலில் பணியாற்றிய மற்ற 42 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.

இயந்திரம் செயலிழந்துவிட்ட நிலையில், பேரலை ஒன்று தாக்கியதும் கப்பல் கவிழ்ந்துவிட்டதாக திரு எடுவரொடோ கூறினார்.

கப்பலில் பிலிப்பீன்ஸ் நாட்டவர் 39 பேரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த தலா இருவரும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பேரலைகளுக்கும் பலத்த காற்றுக்கும் இடையில் விமானங்கள், சுற்றுக்காவல் படகுகள் மூலமாகத் தேடும் பணி தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!