ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் V பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கமேலியா தேசிய ஆய்வுக் கழகம், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (RDIF) ஆகியவை இணைந்து தயாரித்த இந்த தடுப்பு மருந்தை விரைவில் வட்டார ரீதியில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தத் தடுப்பு மருந்து தேவையான தரப் பரிசோதனைகளில் தேறியிருப்பதால், அதனை பொதுமக்களுக்கு வழங்குவதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பு மருந்தாக, ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை அதிகாரபூர்வமாக கடந்த மாதம் 11ஆம் தேதி ரஷ்யா பதிவு செய்தது.
அடுத்த சில மாதங்களுக்குள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ குடியிருப்பாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அந்நகர மேயர் செர்கே சோபியானின் தெரிவித்தார்.