மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆற்றின் நீரை மாசுபடுத்தியதாக சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டை சகோதரர்கள் நால்வரும் மறுத்துள்ளனர். அவர்கள் நால்வருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் ராவாங் மாவட்டத்தின் சுங்கை கோங் ஆற்று நீர் மாசுபட்டதால் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது.
கோலாலம்பூரிலும் சிலாங்கூரிலும் 1.2 மில்லியன் மக்கள் தண்ணீரின்றி அவதிப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வாகன பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அவர்களில் நால்வர் அண்ணன், தம்பிகள். கழிவுநீரை வெளியேற்றியதன் விளைவாக ஆற்று நீர் மாசுபட்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.