பெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்

‘உலகின் ஆக அதிக எடை கொண்டவர்’ என்று 2017ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஜுவன் பெட்ரோ ஃபிரான்கோ, கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக, கொரோனா தொற்றைச் சமாளிப்பது அவருக்கு பெரும் போராட்டமாகவே இருந்தது.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த அவர், பல ஆண்டுகளாக உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி, வயிற்று குறைப்பு அறுவை சிகிச்சை என பல்வேறு முறைகளைக் கையாண்டு 250 கிலோவுக்கு மேல் எடை குறைத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு 595 கிலோ எடையுடன் இருந்த அவர், தற்போது சுமார் 208 கிலோ எடையுடன் இருக்கிறார்.

“மிகக் கொடிய நோய்,” என கொரோனா தொற்றைக் குறிப்பிடும் ஃபிரான்கோ, “தலைவலி, உடல்வலி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பெரும் அவதியுற்றேன்," என்றார்.

உலக அளவில் அதிகமாக கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் இருக்கும் மெக்சிகோவில், கொரோனா தொற்றி உயிரிழந்த சுமார் 74,000 பேரில் கால்வாசிப்பேர் அதிக பருமனானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!