பாரிஸ் நகரில் கத்திக்குத்து; நால்வர் காயம்

பாரிஸ்: பாரிஸ் நகரில் நால்வர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு ‘சார்லி ஹெப்டோ’ சஞ்சிகை செயல்பட்ட அலுவலகத்துக்கு அருகே இந்தக் கத்திக்குத்து சம்பவம் நடந்தது என்று பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதே இடத்தில்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

சம்பவம் தொடர்பில் சந்கேக நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த நால்வரில் இருவரது நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“நான் அலுவலகத்தில் இருந்தேன், அப்போது அலறல் சத்தம் கேட்டது, சன்னல் வழியாகப் பார்த்தபோது ஒரு பெண் தரையில் விழுந்து கிடந்தார், உடனே உதவிக்கு ஓடினேன்,” என்று வாெனாலிக்கு அளித்த ேபட்டியில் சாட்சியாளர் ஒருவர் கூறினார்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு கத்தியை போலிசார் கைப்பற்றியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிைடயே இந்த இடத்தை தவிர்க்குமாறு உள்ளூர் மக்களை போலிசார் அறிவுறுத்தி யுள்ளனர். அங்கு ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சந்தேக நபர் ஏன் கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை.

அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலிசார் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!