பிரிட்டிஷ் மக்களை எச்சரிக்கும் போரிஸ் ஜான்சன்

2 mins read
c7649abe-09b1-40ea-bb9f-153a6baa6485
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிரான அதிருப்திக் குரல் அதிகரித்து வருகிறது.படம்: பிபிசி -

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யைத் தாம் கையாண்ட விதம் குறித்து பிரிட்­டிஷ் மக்­கள் சினங்­கொண்­டி­ருப்­பது தமக்­குத் தெரி­யும் என்று பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­துள்­ளார்.

தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக மேலும் கிட்­டத்­தட்ட 16,000 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்று பிரிட்­டிஷ் அதி­காரி உறுதி செய்­ததை அடுத்து திரு ஜான்­சன் இவ்­வாறு கூறி­னார்.

திரு ஜான்­ச­னுக்கு எதி­ரான அதி­ருப்­திக் குரல் அதி­க­ரித்து வரும் நிலை­யில் எதிர்­வ­ரும் குளிர்­கா­லம் பிரிட்­ட­னுக்­குச் சோத­னைக்­கா­ல­மாக இருக்­கும் என்று அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

"மக்­கள் கோப­மாக இருக்­கி­றார்­கள் என்று எனக்­குத் தெரி­யும். அதி­லும் என்­மீது அவர்­கள் சினங்­கொண்­டி­ருப்­பது என­க்­குத் தெரி­யும்," என்று பிபிசி செய்தி நிறு­வனத்திற்கு அளித்த பேட்­டி­யில் அவர் கூறி­னார்.

"கிறிஸ்­மஸ் வரை பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­வ­ரும். அதற்­குப் பிற­கும் அதே நிலை தொட­ர­லாம். பொது­மக்­கள் பய­மின்றி வாழ வேண்­டும். அதே வேளை­யில் பகுத்­த­றி­வை­யும் பயன்­

ப­டுத்த வேண்­டும்," என்­றார் திரு ஜான்­சன்.

பிரிட்­ட­னில் மேலும் பல­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு வரும் வேளை­யில், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் பொறுப்பு திரு ஜான்­ச­னுக்கு இருக்­கிறது. அது­மட்­டு­மல்­லாது, வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளி­யலை மீண்­டும் உயிர்ப்­பித்து பிரிட்­டிஷ் மக்­க­ளுக்கு வேலை­களை உரு­வாக்­கித் தரும் கட­மை­யும் அவ­ருக்கு இருக்­கிறது.

திரு ஜான்­சனை ஆத­ரிப்­ப­தில் அவ­ரது கன்­சர்­வேட்­டிவ் கட்சி பிள­வு­பட்­டுள்­ளது. தமது கட்­சி­யி­ன­ரின் முழு ஆத­ர­வை­யும் பெற்று தமது அதி­கா­ரத்தை வலுப்­ப­டுத்த அவர் முற்­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், கடந்த மாதம் 25ஆம் தேதி­யி­லி­ருந்து இம்­மா­தம் 2ஆம் தேதி வரை தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக மேலும் 15,841 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட தக­வல் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

இதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டோர் தொடர்­பான அன்­றா­டப் பதிவு, முன் இல்­லாத அள­வுக்கு நேற்று முன்­தி­னம் 22,961ஆகப் பதி­வா­னது.

இங்­கி­லாந்து பொது சுகா­தா­ரத் துறை எதிர்­நோக்­கிய தொழில்­நுட்­பக் கோளாறு சரி­செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக பிரிட்­டிஷ் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­னர்.