பொன்சேகா: பிரபாகரன் மகன்தான் புலிகள் சிறுவர் படையின் தலைவன்

கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில் உள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுவர் படை அணியின் முதன்மைக் கட்டளை அதிகாரியாகச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் பிரபாகரனின் மனைவி புலிகளின் விநியோகப் பிரிவின் பொறுப்பாளராகவும் மூத்த மகன் அந்த அமைப்பின் கர்னலாகவும் மகள் பெண்கள் பிரிவில் மேஜராகவும் செயல்பட்டதாக பொன்சேகா குறிப்பிட்டார்.

இறுதிக்கட்டப் போர் முடிவடைந்த பிறகு பிரபாகரன் மற்றும் மூத்த மகனின் சடலங்கள் மட்டுமே ராணுவத்துக்குக் கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய எஸ்.கஜேந்திரன் எம்பி, பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கு உணவு, தண்ணீர் வழங்கி அவரை இலங்கை ராணுவமே சுட்டுக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!