இந்தோனீசியாவில் புதிய சட்டத்துக்கு எதிராக போராட்டம்; நூற்றுக்கணக்கானோர் கைது

1 mins read
024a4d4f-8cec-41d4-8f6e-7bbb89c66c92
இந்தோனீசியாவின் பனுயூமாசில் போலிஸ் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

இந்­தோ­னீ­சி­யா­வின் புதிய தொழி­லா­ளர் சட்­டத்­துக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து நேற்று இரண்­டா­வது நாளாக நடை­பெற்ற போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கலைக்க தண்­ணீ­ரைக் குழாய்­களில் பீய்ச்சி அடித்­த­து­டன், கண்­ணீர்ப் புகைக் குண்­டு­க­ளை­யும் போலி­சார் பயன்­ப­டுத்­தி­னர். இந்தோனீசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட நூற்றுக்கணக்கானவர்களை போலி­சார் கைது செய்­த­னர்.

ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, நேற்று சுமார் 400 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

கடந்த திங்­கட்­கி­ழமை நாடாளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட இந்­தப் புதிய சட்­டம், வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்க்­க­வும் வேலை­களை உரு­வாக்­க­வும் தேவை­யான ஒன்று என்று கூறப்­பட்­டது.

இந்­தப் புதிய சட்­டத்­தின்­கீழ், நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­களை எவ்­வ­ளவு காலத்­துக்கு வேண்­டு­மா­னா­லும் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் வைத்­துக்­கொள்­ளலாம். ஆனால், அர­சாங்க ஆத­ர­வு­டன் வேலை பாது­காப்­புக் காப்­பு­று­தியை புதிய சட்டம் வழங்­கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறைபாடு, ஊழியர்களின் உரிமைகளில் பலவீனம் போன்ற காரணங்களால் மக்கள் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.