சிறைச்சாலைகளில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை; புதிய கைதிகளுக்கு தொற்றுப் பரிசோதனை

சிறைச்சாலைகளில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை; புதிய கைதிகளுக்கு தொற்றுப் பரிசோதனை

2 mins read
e7c22552-c723-414c-a619-e3f5cc334c50
படம்: ராய்ட்டர்ஸ் -

மலே­சி­யா­வில் புதிய சிறைக் கைதி­க­ளுக்­கும் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கும் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று அந்­நாட்டு மூத்த அமைச்­சர் இஸ்மாயில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார்.

சிறைச்­சா­லை­யில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த அத்­த­கை­யோர் 15 நாட்­கள் தனி­மை­யில் வைக்­கப்­ப­டு­வர் என்­றும் அவர் சொன்­னார்.

தனி­மைப்­ப­டுத்­தும் காலத்­தின் முடி­வில் சிறைக் கைதி­க­ளுக்­குத் தொற்று இல்லை என உறுதி செய்­யப்­பட்­டா­லும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக மேலும் ஐந்து நாட்­க­ளுக்கு அவர்­கள் தனி­மை­யில் வைக்­கப்­படுவர் என்று திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

"சிறைச்­சா­லை­களில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்தும் செயல்­பாட்டு நடை­மு­றை­களில் இவை அடங்­கும்," என்று ஃபேஸ்புக் நேர­லை­யில் அவர் நேற்று தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் அண்­மை­யில் பதி­வான கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் சிறைச்­சா­லை­களிலும் தடுப்­புக்­கா­வல் மையங்­க­ளி­லும் கட்­டுப்­படுத்­தப்­பட்டு இருப்­ப­தாக திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

"என்­றா­லும், நாட்­டில் கிரு­மித்­தொற்று திடீ­ரென உயர்ந்­தி­ருப்­பது மலே­சி­யர்­க­ளைப் பீதி­ய­டை­யச் செய்­துள்­ளது," என்­றார் அவர்.

சிறைக்­கை­தி­க­ளைச் சந்­திக்க அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் சிறைச்­சா­லைக்­குச் செல்ல அதி­கா­ரி­கள் தடை விதித்­துள்­ள­னர். சிறைச்­சாலை வளா­கங்­கள் தின­மும் இரு­முறை சுத்­தப்­ப­டுத்­தப்­படும். சிறைக் கைதி­க­ளுக்கு இடையே தனி­ந­பர் இடை­வெளி உறுதி செய்­யப்­படும் என்று திரு இஸ்­மா­யில் சொன்­னார்.

சிறைச்­சா­லை­களில் நெரி­ச­லைத் தவிர்க்க தற்­கா­லிக சிறைச்­சா­லை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். கொவிட்-19 தொற்­றி­யோ­ரைக் கண்­கா­ணித்து அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்­வொரு சிறைச்­சா­லை­யி­லும் மருத்­து­வக் கூடங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் சொன்­னார்.

375 பேருக்கு நோய்த்­தொற்று

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் மேலும் 375 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது. அவற்­றில் 371 உள்­ளூர் நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அடங்­கும். எஞ்­சிய நால்­வர் வெளி­நா­டு­களில் இருந்து மலே­சியா வந்­த­வர்­கள்.

புதி­தாக அறி­விக்­கப்­பட்ட நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் 271 சம்­ப­வங்­கள் சாபா மாநி­லத்­தில் பதி­வா­ன­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று தெரி­வித்­தார். சிலாங்­கூ­ரில் 36 சம்­ப­வங்­களும் கெடா­வில் 16 சம்­ப­வங்­களும் பதி­வா­கின.

மலே­சி­யா­வில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை புதிய உச்­ச­மாக 691 சம்­ப­வங்­கள் பதி­வான நிலை­யில், நேற்று இரண்­டா­வது நாளாக தொற்று குறைவாக பதிவானது.