கொவிட்-19 கொள்ளை நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பு மருந்தை ரஷ்யா வரும் 15ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக அந்த மருந்தை உருவாக்கியவர்கள் நேற்று தெரிவித்தனர்.
சிபெரியாவின் வெக்டர் ஆய்வுக் கழகத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.
மனிதர்களிடம் அந்த மருந்தைப் பயன்படுத்தி பரிசோதிக்கும் முதற்கட்ட நடவடிக்கை கடந்த மாதம் நிறைவுற்றதாக அவர்கள் கூறினர்.
இரண்டாவது கிருமிப் பரவலைத் தடுக்க இரவு விடுதிகளையும் மதுபானக் கூடங்களையும் மூட மாஸ்கோ தயாராகி வரும் நிலையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் நேற்று ரஷ்யாவில் ஆக அதிகமான கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவாயின.