தேர்தல் பிரசாரத்தைத் தொடரும் டிரம்ப்

தேர்தல் பிரசாரத்தைத் தொடரும் டிரம்ப்

2 mins read
c07bfb4c-b13c-42a1-9d63-fff29c6249d5
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­தார். இந்­நி­லை­யில், அதி­பர் தேர்­தல் பிர­சா­ரத்தை அவர் தொடர இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் ஜன­நா­யக வேட்­பா­ளர் ஜோ பைட­னுக்கு எதி­ராக அடுத்த வாரம் நடை­பெற இருந்த தேர்­தல் விவா­தம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

அதி­பர் டிரம்ப்­புக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தால் இரண்­டா­வது தேர்­தல் விவா­தத்­தைக் காணொளி வாயி­லாக நடத்த திட்­ட­மி­டப்­பட்­டது. இதற்கு அதி­பர் டிரம்ப் மறுப்பு தெரி­வித்­த­தால் அது ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. கடைசி தேர்­தல் விவா­தம் இம்­மா­தம் 22ஆம் தேதி­யன்று நடத்­தப்­பட இருக்­கிறது.

வெள்ளை மாளி­கை­யின் மேல் மாடத்­தி­லி­ருந்து அதி­பர் டிரம்ப் தமது ஆத­ர­வா­ளர்­களி­டம் பேசு­வார் என்று அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இதில் நூற்­றுக்­

க­ணக்­கா­னோர் கலந்­து­கொள்­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­பர் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து, மத்­திய ஃபுளோரி­டா­வுக்கு அதி­பர் டிரம்ப் நாளை பய­ணம் மேற்­கொள்­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வரும் நவம்­பர் மாதம் நடை­பெ­றும் அதி­பர் தேர்­த­லில் வெற்றி பெற்று இரண்­டா­வது முறை­யாக அமெ­ரிக்க அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்க அதி­பர் டிரம்ப் இலக்கு கொண்­டுள்­ளார். அவர் வெற்றி பெற வேண்­டும் என்­றால் ஃபுளோரிடா மக்­க­ளின் ஆத­ரவு பெறு­வது மிக­வும் முக்­கி­யம் என்று கூறப்­ப­டு­கிறது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டதை அடுத்து, சேன்­ஃபர்ட் நக­ரில் உள்ள விமான நிலை­யத்­தில் அதி­பர் டிரம்ப் தமது முதல் பிர­சா­ரக்­கூ­ட்டத்தை நடத்த இருக்­கி­றார்.

பிர­சா­ரக்­கூட்­டம் உள்­ள­ரங்­கில் நடத்­தப்­ப­டுமா அல்­லது வெளிப்­

பு­றத்­தில் நடத்­தப்­ப­டுமா என்­பது குறித்து தக­வல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

ஃபுளோரிடா பிர­சா­ரக்­கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வோ­ரின் உடல்­வெப்­ப­நிலை சோதிக்­கப்­படும். அவர்­க­ளுக்கு முகக்­க­வ­சங்­களும் கிருமி நாசினி திர­வ­மும் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அதி­பர் டிரம்ப்­புக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக இம்­மா­தம் 2ஆம் தேதி­யன்று அறி­விக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து, ராணுவ மருத்­து­வ­ம­னை­யில் அவர் மூன்று நாட்­கள் தங்கி சிகிச்சை பெற்­றார். அவ­ரி­ட­மி­ருந்து கிருமி பர­வும் அபா­யம் இன்­னும் உள்­ளதா என்­பது குறித்து தக­வல் வெளி­

யி­டப்­ப­ட­வில்லை.

தேர்­தல் பிர­சா­ரத்­தைத் தொடர அதி­பர் டிரம்ப் எடுத்­துள்ள முடி­வுக்கு திரு பைடன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, தற்­போது எந்த ஒரு மருந்­தை­யும் தாம் எடுக்­க­வில்லை என்று தொலைக்­காட்சி பேட்­டி­யில் அதி­பர் டிரம்ப் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை தமக்கு மீண்­டும் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

தமக்கு சுவா­சப் பிரச்­சினை இல்லை என்று தெரி­வித்த அதி­பர் டிரம்ப், கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தால் வழக்­க­மான சுறு­சு­றுப்பை இழந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார். கொரோனா கிருமி யாரி­ட­மி­ருந்து தமக்­குப் பர­வி­யது என்­பது தமக்­குத் தெரி­ய­வில்லை என்­றார் அவர்.