கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் இரு வாரங்களுக்கு மீண்டும் பகுதி முடக்கநிலை

கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் இரு வாரங்களுக்கு மீண்டும் பகுதி முடக்கநிலை

2 mins read
c116253b-bf96-4261-a4de-3377ca29b570
-

மலே­சி­யா­வின் கூட்­ட­ர­சுப் பிர­தே­சங்­க­ளான கோலா­லம்­பூர், புத்­ரா­ஜெயா ஆகி­ய­வற்­று­டன் சிலாங்­கூர் மாநி­லத்­தி­லும் நாளை தொடங்கி இரு வாரங்­க­ளுக்கு நிபந்­த­னை­யுடன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை பிறப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அப்­ப­கு­தி­களில் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சி­யர்­க­ளால் 'கிள்­ளான் பள்­ளத்­தாக்கு' என்று அழைக்­கப்­படும் இந்த மூன்று பகு­தி­க­ளின் மக்­கள்­தொகை ஏறத்­தாழ ஏழு மில்­லி­யன்.

இந்த நட­வ­டிக்கை குறித்து நேற்று அறி­வித்த மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், "நோய்ப் பர­வ­லைக் கட்டுப்­படுத்த சிலாங்­கூர், கோலா­லம்­பூர், புத்­ரா­ஜெயா ஆகிய பகு­தி­களில் நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை பிறப்­பிக்க தேசிய பாது­காப்பு மன்­றம் இணக்­கம் கண்­டுள்­ளது.

"அக்­டோ­பர் 14ஆம் தேதி நள்­ளி­ரவு முதல் அக்­டோ­பர் 27ஆம் தேதி வரை ஆணை நடப்­பில் இருக்­கும்," என்று சொன்­னார்.

நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை என்று அழைக்­கப்­படும் பகுதி முடக்­க­நிலை நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு முடி­வ­டைந்­தது. ஜூன் 10ஆம் தேதி அது முடிவுக்கு வந்தது.

அதை­ய­டுத்து, மீட்­சிக்­கான நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை மலே­சியா அறி­வித்து இருந்­தது. அதன்­படி, பெரும்­பா­லான வர்த்­த­கங்­களும் சமூக நட­வ­டிக்­கை­களும் மீண்­டும் தொட­ர­லாம். சாபா மாநி­லத்­தைத் தவிர்த்து இன்று வரை அந்த ஆணை நடப்­பில் உள்­ளது.

பகுதி முடக்­க­நிலை நடப்­பில் உள்ள பகு­தி­களில் பெரும்­பா­லான தொழில்­து­றை­கள் தொடர்ந்து இயங்­க­லாம். சமூக இடை­வெளி போன்ற சுகா­தார முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை அவை பின்­பற்­ற வேண்டும்.

ஆனால், வழி­பாட்­டுத் தலங்­கள், பள்­ளி­கள் ஆகி­யவை மூடப்­ப­டும். விளை­யாட்டு நட­வ­டிக்­கை­ளுக்­குத் தடை விதிக்­கப்­படும்.

சிலாங்­கூர், கோலா­லம்­பூர், புத்ரா­ஜெயா ஆகிய பகு­தி­களில் இருந்து வெளி­யே­றும், அங்கு செல்­லும் வாக­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் சாலைத் தடுப்­பு­களை அமைக்­க­ உள்­ள­னர்.