ஜான்­சன் & ஜான்­சன்: கொரோனா தடுப்பு மருந்து சோதனை தற்காலிக நிறுத்தம்

ஜான்­சன் & ஜான்­சன்: கொரோனா தடுப்பு மருந்து சோதனை தற்காலிக நிறுத்தம்

1 mins read
12823559-40d1-4da2-8b60-9e8a5fcc0fe5
படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட நபர் ஒரு­வருக்கு பக்கவிளைவுகள் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஜான்­சன் & ஜான்­சன் நிறு­வ­னம் தடுப்பு மருந்து சோத­னை­யைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யுள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வருக்கு ஏற்­பட்­டுள்ள, குறிப்­பி­டப்­படாத உடல்­ந­லப் பாதிப்பு குறித்து அந்­நி­று­வ­னம் ஆய்வு செய்து வரு­கிறது. விசா­ரணை முடிந்­த­வு­டன் அது­கு­றித்த கூடு­த­லான தக­வல்­கள் பகி­ரப்­படும் என அந்­நி­று­வ­னம் கூறி­யது.

கொரோனா தடுப்பு மருந்து கண்­டு­பி­டிப்­ப­தற்­கான உல­க­ளா­விய போட்டி நில­வி­வ­ரும் வேளை­யில், ஜான்­சன் & ஜான்­சன் நிறு­வ­னம் தடுப்பு மருந்து சோத­னை­யைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி இருப்­பது தடுப்பு மருந்­தின் பாது­காப்பு குறித்த கவ­லையை எழுப்­பி­யுள்­ளது.

மேலும், மக்­க­ளி­டம் நோய் தடுப்பு மருந்தை விநி­யோ­கிப்­பது குறித்து நாட்­டுத் தலை­வர்­கள் பேசி வந்­துள்ள நிலை­யில், தடுப்பு மருந்து சோதனை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டி­ருப்­பது அது எப்­போது பயன்­பாட்­டிற்கு வரும் என்­பது குறித்த சந்­தே­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பெரு முதல் தென்­னாப்­பி­ரிக்கா வரை ஜான்­சன் & ஜான்­சன் நிறு­வ­னத்­தின் தடுப்பு மருந்து சோத­னை­யில் கிட்­டத்­தட்ட 60,000 பேர் ஈடு­படுத்­தப்­பட்­டுள்­ள­னர்.