சீனா முதல் ஐரோப்பா வரை மீண்டும் முடக்கம்

சீனா முதல் ஐரோப்பா வரை மீண்டும் முடக்கம்

2 mins read
9abb20b0-d7bd-4470-b561-5460b97a4616
படம்: இபிஏ -

ஐரோப்பா முதல் சீனா வரையில் கிருமித்தொற்று அதி கரித்து வருவதால் மீண்டும் முடக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்­பா­வில் இரண்­டா­வது அலை கிரு­மிப்­ப­ர­வல் கார­ண­மாக புதிய கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

சீனா­வில் ஆங்­காங்கே கிரு­மித்­தொற்று தலை­காட்டுவதால் ஒரே நக­ரத்­தைச் சேர்ந்த ஒன்­பது மில்­லி­யன் மக்­க­ளுக்கு சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்­கி­டையே தடுப்­பூ­சி­க­ளைக் கண்­டு­பி­டிக்­கும் முயற்­சி­யி­லும் தொய்வு ஏற்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் மேற்­கொள்­ளப்­பட்ட இரண்டு தடுப்­பூசி சோத­னை­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

தடுப்­பூ­சி­கள் கண்டுபிடிக்கப் பட்டால் கிரு­மித்­தொற்றில் இ­ருந்து தப்­பி­வி­ட­லாம் என்று பெரி­தும் காத்­தி­ருந்த நாடு­க­ளுக்கு இந்தச் செய்தி பேரி­டி­யாக தாக்கியுள்ளது.

அமெ­ரிக்க மருந்­துத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான எலி லில்லி, நோய் எதிர்ப்பு சிகிச்­சை­யில் 3வது கட்ட தடுப்­பூசி சோத­னை­களை இடைக்­கா­ல­மாக நிறுத்துவதாக அறி­வித்­துள்­ளது.

இதற்­கான கார­ணத்தை அது விளக்­க­வில்லை.

இதற்கு முன்பு ஜான்­சன் அண்ட் ஜான்­சன் நிறு­வ­ன­மும் இதே போன்ற பிரச்சினை காரணமாக தடுப்­பூசி சோத­னை­களை இடைக் காலமாக நிறுத்துவதாக தெரிவித் தது.

உலகம் முழு­வ­தும் 37 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் இரண்டாவது அலையில் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­கிறது.

முதல் கிரு­மிப்பர­வ­லைத் தடுத்து நிறுத்­திய நாடுகள் தற்­போது இரண்­டா­வது அலைக்கு எதிராக போராடி வருகின்றன.

ஐரோப்­பா­வில் நெதர்­லாந்தில் பகு­தி­நேர முடக்­கநிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மது­பா­னக் கூடங்­கள், உண­வ­கங்­கள் செயல்பட அனுமதியில்லை. பதின்­மூன்று வய­துக்கு ேமற்­பட்­ட­வர்­கள் கட்டாயம் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பிரிட்டனில் தொழிலாளர் எதிர்க் கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மெர், கிருமிப்பரவலைத் தடுக்க இரண்டு முதல் 3 வாரங்களுக்கு முடக்க நிலையை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அறிவியல் அறிஞர்கள் ஆலோ சனைகளின்படி கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.