தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை மரணம்

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை மரணம்

1 mins read
49930ab4-4cac-47fe-bf6b-160ba98d2476
குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் ரிவருடன் தாயார் ரெய்னா மே நாசிங். படம்: கபடிட் -

பிலிப்­பீன்­சில் சிறை­யில் அடைக்­கப்­பட்ட தாயி­ட­மி­ருந்து பிரிக்­கப்­பட்ட மூன்று மாதக் குழந்தை இறந்­து­விட்­ட­தால் அதி­கா­ரி­கள் கண்­ட­னத்­துக்கு ஆளாகி யிருக்­கின்­ற­னர்.

சமூக ஆர்­வ­ல­ரான ரெய்னா மாயே நாசி­னோ­வை­யும் மற்­றொரு சமூக சேவை­யா­ள­ரை­யும் சட்­ட­வி­ரோ­த­மாக ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த­தா­கக் கூறி கடந்த ஆண்டு போலி­சார் கைது செய்­த­னர்.

ஆனால் இந்­தக்­ குற்­றச்­சாட்டை இருவரும் மறுத்­துள்­ளார். இதற்­கி­டையே சிறை­யில் அடைக்­கப்­பட்ட அவ­ருக்கு பிறந்த குழந்­தையை அதி­கா­ரி­கள் பிரித்­து­விட்­ட­னர்.

இதையடுத்து இரண்டு மாதத்­தில் குழந்தை இறந்­து­விட்­டது.

இதன் காரணமாக நாசி னோவை நடத்தப்படும் விதம் குறித்து கேள்வியெழுந்துள்ளது.