ஆர்ப்பாட்டத் தடையை எதிர்த்து ஆயிரக்கணக்கில் திரண்டனர்; 20க்கு மேற்பட்டோர் கைது

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேங்காக் தெருக்களில் இன்று (அக்டோபர் 15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னர் மகாவஜ்ஜிரலொங்கோன், பிரதமர் பிரயூத் சான் ஓ சா ஆகியோரைக் குறிவைத்து கடந்த 3 மாதங்களாக நடத்தப்படும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு திணிக்கப்படும் தடைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய்லாந்து மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று விரல்களில் வணக்கம் செலுத்தி தங்களது எதிர்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

திரு பிரயூத் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை சூழ்ச்சித் திறனுடன் கையாண்டதாகக் குறிப்பிட்டு அவரைப் பதவியிலிருந்து நீக்கும் பொருட்டு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஆனால், தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதாக முன்னாள் ஜுண்டா தலைவருமான திரு பிரயூத் குறிப்பிடுகிறார்.

மேலும், அரசருக்கான அதிகாரங்களைக் குறைத்து புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்று அவசர ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட அரை மணி நேரத்துக்குள், திரு பிரயூத்தின் அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கலவரத் தடுப்பு போலிசார் கலைத்தனர். ஆணைகளை ஏற்க மறுத்த 20க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!