மலேசியாவில் நேற்றைய நிலவரப்படி மேலும் 629 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 18,758ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, கிருமித்தொற்று காரணமாக நேற்று ஆறு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதுவரை கொரோனா காரணமாக மலேசியாவில் 176 பேர் மாண்டுவிட்டனர்.
மலேசியாவில் கிருமித்தொற்று பாதிப்பு மோசமடைந்து வருவதால் கடந்த இரண்டு வாரங்களாக அந்நாட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்கு நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் கோலாலம்பூர், புத்ரா ஜெயா, சிலாங்கூர் ஆகிய இடங்களில் நிபந்தனையுடனானநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சாபாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரக்கூட்டங்களில் மலேசிய தீபகற்கம், சரவாக் மாநிலம் ஆகியவற்றின் அரசியல்வாதிகள்
கலந்துகொண்டபோது அவர்களில் சிலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரக்கூட்டம் நடைபெற்றபோது சாபாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சட்டவிரோத குடியேறி களுக்கான முகாமில் கிருமி
பரவியதை அடுத்து, அம்மாநிலத்தில் நிலைமை மோசமடைந்தது.

