மகோன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜோ பைடனும் அவரது குடும்பத் தினரும் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என்று ஆவேசத்துடன் கூறி யுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு மகோன் நகரப் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜோ பைடனை கடுமையாகச் சாடினார்.
“பைடனை சிறையில் அடையுங்கள், ஹில்லாரியை சிறையில் அடையுங்கள். ஜோ பைடன் ஊழல் அரசியல்வாதி, அவரது குடும்பம் ஒரு குற்றவியல் நிறுவனம்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.