ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்க தாய்லாந்து பிரதமர் உத்தரவு

பேங்­காக்: தாய்­லாந்­தில் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­கள் நாளுக்கு நாள் வலுத்து வரு­கிறது. வெள்ளிக் ­கி­ழமை இரவு உச்­சக்­கட்­ட­மாக போலி­சா­ருக்­கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­ க­ளுக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தடுப்­பு ­களை உடைத்து முன்­னே­றி­ய­தால் அவர்­களை வரி­சை­யாக நின்ற போலி­சார் கவ­சங்­க­ளு­டன் தடுத்து நிறுத்­தி­னர்.

இரு தரப்­பி­லும் தள்­ளு­முள்ளு ஏற்­பட்டு போர்க்­க­ள­மாக மாறி­யது. போலி­சார் தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்து கூட்­டத்தைக் கலைக்க முயற்சி செய்­த­னர். இந்த நிலையில் ஏழு பேரை போலிசார் கைது செய்து உள்ளனர்.

இதற்­கி­டையே பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும் என்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் கோரிக்­கையை திரு பிர­யுத் சான்-ஒ-சா நிரா­க­ரித்து உள்­ளார்.

பேங்­காக்­கில் அடுத்த 30 நாட்­க­ளுக்கு அவ­ச­ர­நிலை பிர­க­ட­னப் படுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில் சட்­டத்தை மீறி நடப்­ப­வர்­களை இரும்­புக் கரம் கொண்டு ஒடுக்­கு­மாறு பிர­த­மர் பிர­யுத் உத்­த­ர­விட்­டு உள்­ளார்.

ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடப்போவதாக சூளுரைத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!