பேங்காக்: தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. வெள்ளிக் கிழமை இரவு உச்சக்கட்டமாக போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பு களை உடைத்து முன்னேறியதால் அவர்களை வரிசையாக நின்ற போலிசார் கவசங்களுடன் தடுத்து நிறுத்தினர்.
இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போர்க்களமாக மாறியது. போலிசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். இந்த நிலையில் ஏழு பேரை போலிசார் கைது செய்து உள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை திரு பிரயுத் சான்-ஒ-சா நிராகரித்து உள்ளார்.
பேங்காக்கில் அடுத்த 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி நடப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமாறு பிரதமர் பிரயுத் உத்தரவிட்டு உள்ளார்.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடப்போவதாக சூளுரைத்துள்ளனர்.