உலக கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவில் 400,000 விழுக்காடு உயர்ந்துள்ளது.
தொடக்கத்தில் கிருமிப்பரவலின் வேகத்தை வெற்றிகரமாகக் குறைத்துள்ள ஐரோப்பா, கடந்த சில வாரங்களாக கிருமித்தொற்று அதிகரிப்பைக் கண்டது. கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை சராசரியாக 140,000 ஆக உள்ளது.
இந்தியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த தினசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கையைவிட ஐரோப்பாவின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.
உலகில் ஏற்படும் ஒவ்வொரு புதிய 100 கிருமித்தொற்றுகளில் 34 ஐரோப்பாவைச் சேர்ந்தவை. கிருமித்தொற்று தொடங்கியது முதல் ஐரோப்பிய கண்டத்தில் இதுவரை 6.3 மில்லியன் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.