மனிதத் தோலில் கொவிட்-19 கிருமி உயிர்ப்புடன் இருக்கும் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதத் தோலில் சளிக்காய்ச்சல் கிருமி 1.8 மணி நேரம் செயல்திறனுடன் இருக்கும். இந்நிலையில், அதைப் போல ஐந்து மடங்கு நேரத்திற்கு கொரோனா கிருமி நோயைப் பரப்பும் திறனைக் கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றைத் தடுக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டிய அவசியத்தை இது காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்து ஒரு நாளான மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோலை அந்த ஆய்வுக்குழு சோதனைக்கு எடுத்துக்கொண்டது.
எத்தனாலைத் தடவிய 15 நொடிகளில் கொரோனா கிருமியும் சளிக்காய்ச்சல் கிருமியும் நோயை ஏற்படுத்தும் திறனை இழந்துவிடும். அந்த வேதிப்பொருள்தான் கைச்சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
“கொரோனா கிருமி அதிக நேரம் உயிர்ப்புடன் இருப்பது, தொடுவதன் மூலம் நோய் பரவும் அபாயத்தை அதிகப்படுத்துகிறது. ஆயினும், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அந்த அபாயத்தைக் குறைக்கலாம்,” என்று அந்த ஆய்வு கூறுகிறது.