இதற்குமுன் இல்லாத வகையில் மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 871 பேருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 20,498ஆக உயர்ந்தது.
மேலும் எழுவர் உயிரிழக்க, கொரோனா தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 187ஆக அதிகரித்தது.
சாபாவிலும் தலைநகர் கோலாலம்பூர் அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலத்திலும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததால் அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிள்ளான் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேர் அப்பகுதியில் உள்ள கடைத்தொகுதிகளுக்கும் உணவகங்களுக்கும் சென்று வந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

