தொற்று புதிய உச்சம்: அமெரிக்காவில் ஒரே நாளில் 84,000 பேருக்கு கொவிட்-19

தொற்று புதிய உச்சம்: அமெரிக்காவில் ஒரே நாளில் 84,000 பேருக்கு கொவிட்-19

1 mins read
98e2f324-a0e5-435e-9b7e-baee77874913
வாஷிங்டன் அனைத்துலக விமான நிலையத்தில் விமானப் பயணத்துக்காக சிறப்பு உடையணிந்து காத்திருந்த பெண். படம்: ஏஎஃப்பி -

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் இது­வரை இல்­லாத அள­வாக 84,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு கொவிட்-19 நோய்த்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் கணக்­கெ­டுப்பு காட்­டு­கிறது. இதற்கு முன்­ன­தாக ஜூலை 16ஆம் தேதி­தான் ஆக அதி­க­மாக 77,299 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அமெ­ரிக்­கா­வின் 16 மாநி­லங்­களில் புதிய உச்­ச­மாக தொற்று பதி­வா­கி­யது. நவம்­பர் 3ஆம் தேதி நடை­பெ­ற­வி­ருக்­கும் அதி­பர் தேர்­தலில் அதிக போட்டி எதிர்­பார்க்­கப்படும் ஒஹாயோ, மிஷி­கன், வட­கரோ­லினா, பென்­சில்­வே­னியா, விஸ்­கான்­சின் உள்ளிட்ட மாநி­லங்­களில் தொற்று அதி­க­ரித்து வரு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் மீண்­டும் கொரோனா கிரு­மிப் பர­வல் வேகம் அடைந்­தி­ருப்­ப­தற்­கான குறிப்­பிட்ட ஒரு கார­ணத்­தைச் சுகா­தார நிபு­ணர்­கள் கூற­வில்லை. எனி­னும், நோய்த்­தொற்று முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்து அமெ­ரிக்­கர்­கள் சலிப்பு அடைந்­தி­ருப்­ப­தும் மாண­வர்­கள் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்­குத் திரும்­பி­ய­தும் தொற்று அதி­க­ரிக்க கார­ண­மாக இருக்­க­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் அடுத்த ஆண்டு பிப்­ர­வ­ரிக்­குள் அரை மில்­லி­யன் பேர் உயி­ரி­ழந்­து­வி­டக்­கூ­டும் என்று வாஷிங்­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். தற்­போது அந்­நாட்­டில் பதி­வா­கி­யுள்ள உயி­ரி­ழப்பு எண்­ணிக்­கை­யை­விட அது இருமடங்­கிற்­கும் அதி­க­மாகும்.

அமெ­ரிக்­கா­வில் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்­தால் ஏறத்­தாழ 130,000 பேரின் உயி­ரைக் காப்­பாற்ற முடி­யும் என்று அந்த ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.