காபூல் கல்வி நிலையத்தில் பயங்கர தாக்குதல்: 24 பேர் பலி

காபூல் கல்வி நிலையத்தில் பயங்கர தாக்குதல்: 24 பேர் பலி

1 mins read
8c381b1e-84bc-450a-8c7b-0b8ae7d8927d
-

ஆப்­கா­னிஸ்­தா­னின் தலை­ந­கர் காபூ­லில் உள்ள கல்வி நிலை­யம் ஒன்­றில் நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­த­லில் பதின்ம வயது மாண­வர்­கள் உட்­பட 24 பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 50 பேருக்கு மேற்­பட்­ட­வர்­கள் காய­ம­டைந்­த­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பாது­காப்­புப் படை­யி­னர் மனி­த­வெ­டி­குண்டு ஒரு­வரை அடை­யாளம் கண்­ட­தாக உள்­துறை அமைச்சு பேச்­சா­ளர் தாரிக் அரி­யன் என்­ப­வர் குறிப்­பிட்­டார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் 15 முதல் 26 வரை வய­துள்ள மாண­வர்­கள் என்று உள்­துறை அமைச்சு கூறி­யது.

அந்­தத் தாக்­கு­த­லுக்குத் தான் பொறுப்­பல்ல என்று தலி­பான் கூறி­யது. அதே­வே­ளை­யில், அதற்­குத் தானே பொறுப்பு என்று ஐஎஸ்­ஐஎஸ் அமைப்பு டுவிட்­ட­ரில் தெரி­வித்­தது.

ஆப்­கா­னிஸ்­தா­ன் கல­கக்­கா­ரர்­களுக்­கும் அர­சாங்­கத்­திற்­கும் இடை­யில் கத்தாரில் அமை­திப் பேச்சு நடந்து வரும் வேளை­யில், இந்­தத் தாக்­கு­தல் நடந்துள்ளது.