ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் பதின்ம வயது மாணவர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டதாகவும் 50 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் மனிதவெடிகுண்டு ஒருவரை அடையாளம் கண்டதாக உள்துறை அமைச்சு பேச்சாளர் தாரிக் அரியன் என்பவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 15 முதல் 26 வரை வயதுள்ள மாணவர்கள் என்று உள்துறை அமைச்சு கூறியது.
அந்தத் தாக்குதலுக்குத் தான் பொறுப்பல்ல என்று தலிபான் கூறியது. அதேவேளையில், அதற்குத் தானே பொறுப்பு என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு டுவிட்டரில் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் கலகக்காரர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கத்தாரில் அமைதிப் பேச்சு நடந்து வரும் வேளையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.