உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் ஆறறிவு கொண்ட மனிதர்கள் வீட்டிற்குள் அடைந்து கிடந்தனர். ஆனால் ஐந்தறிவு படைத்த உயிர்கள் அனைத்தும் வெளியே தைரியமாக வந்து சுதந்திரமாக சுற்றத் தொடங்கின.
கொரோனா கிருமித்தொற்றின் காரணமாக கடலில் கப்பல் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. கப்பல்கள் அதிக வேகத்துடன் செல்லும்போது கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால் அவை சாதாரணமாக நீர்நிலைகளின் மேலே வருவது அரிது. ஆனால் கொரோனாவால் கடலில் அதிக வேகத்தில் கப்பல்கள் போவது அனைத்தும் நிறுத்தப்பட்டதால் இளஞ்சிவப்பு டால்பின்கள் கடலில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, ஒன்றுடன் ஒன்று தண்ணீரை அடித்து விளையாடத் தொடங்கி உள்ளன.
இதுபோன்ற அதிக கப்பல்கள் இல்லாத நேரத்தில்தான் ஆய்வாளர்கள் கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வார்கள். அதுபோல் இப்போதும் ஆய்வு செய்த குழுவினர்தான் இந்த இளஞ்சிவப்பு டால்பின்களைக் கண்டனர்.