கிருமிப் பரவல் வேகமெடுத்ததைத் தொடர்ந்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் இன்று முதல் மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வருகிறது.
சுமார் 5.5 மில்லியன் மக்கள் வசிக்கும் கொழும்பிலும் அருகில் உள்ள இரு மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவர் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
மூன்று நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள முடக்கம், நிலைமையைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம் என்றனர் அவர்கள்.
இலங்கையில் இதுவரை 9,200க்கும் மேற்பட்ட மக்கள் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கடந்த மூன்று வாரங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கிருமி தொற்றியது முதல் பரவலைத் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.