கொழும்பு நகரில் மீண்டும் முடக்கம்

கொழும்பு நகரில் மீண்டும் முடக்கம்

1 mins read
a3592e8f-2839-4272-b2ec-f5ffc3a36c75
கொழும்பு நகரில் நேற்று (அக்டோபர் 29) சோதனைச்சாவடி ஒன்றின் அருகில் காவலுக்கு நின்றிருந்த ராணுவ வீரர். படம்: ஏஎஃப்பி -

கிரு­மிப் பர­வல் வேகமெ­டுத்­த­தைத் தொடர்ந்து இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­பில் இன்று முதல் மீண்­டும் முடக்­க­நிலை நடப்­புக்கு வரு­கிறது.

சுமார் 5.5 மில்­லி­யன் மக்­கள் வசிக்­கும் கொழும்­பிலும் அரு­கில் உள்ள இரு மாவட்­டங்­க­ளி­லும் அத்­தி­யா­வ­சி­யத் தேவை­க­ளுக்கு மட்­டுமே மக்­கள் நட­மாட அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மூன்று நாட்­க­ளுக்கு அமல்­ப­டுத்­தப்பட்­டுள்ள முடக்­கம், நிலை­மை­யைப் பொறுத்து நீட்­டிக்­கப்­ப­ட­லாம் என்­ற­னர் அவர்­கள்.

இலங்­கை­யில் இது­வரை 9,200க்கும் மேற்­பட்ட மக்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இவர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு கடந்த மூன்று வாரங்­களில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

ஆடை தயா­ரிப்பு நிறு­வ­னம் ஒன்­றில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோரை கிருமி தொற்­றி­யது முதல் பர­வ­லைத் தடுப்­ப­தில் இலங்கை அரசு தீவி­ரம் காட்டி வரு­கிறது.