அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரோன்க்ஸ் வட்டாரத்தில் பெல்மவுண்ட் என்ற பகுதியில் பேருந்து நிலையம் அருகே காத்து இருந்த லியோனார்ட் ஷோல்டர்ஸ், 33, என்பவர் திடீரென்று தரையில் இருந்த ஒரு மூடி திறந்து கொண்டதால் பாதாள குழியில் விழுந்துவிட்டார்.
சுமார் 4 மீட்டர் ஆழத்தில் பள்ளத்தில் வசிக்கும் ஏராளமான எலிகளிடம் அவர் வசமாக சிக்கிக்கொண்டார். அவரால் நகரக்கூட முடியவில்லை.
வாயைத் திறந்தால் வாய்க்குள் எலிகள் போய்விடும் என்பதால் அவர் வாய் மூடிய படியே இருந்தார் என்று லியோனார்ட்டின் சகோதரர் கூறியதாக சிபிஎஸ் நியூயார்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சுமார் 30 நிமிடங்களில் லியோனார்ட் மீட்கப்பட்டார்.