நிலநடுக்கம்: துருக்கி, கிரீசில் மும்முரமாக மீட்புப் பணிகள் பேரிடரைத் தொடர்ந்து 196 முறை அதிர்வுகள்; இரு நாடுகளிலும் பலர் பலி

2 mins read

இஸ்­மிர்: துருக்­கி­யி­லும் பக்­கத்­தில் உள்ள கிரீஸ் நாட்­டி­லும் பயங்­க­ர­மான நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டதை அடுத்து மீட்­புப் பணி­கள் தீவி­ர­மாக நடந்து வரு­கின்­றன. துருக்­கி­யில் இஸ்­மிர் என்ற மேற்­குப் புற நக­ரில் பல கட்­ட­டங்­கள் இடிந்துவிட்டன.

அந்த இடி­பா­டு­களில் சிக்கி இருப்­போ­ரைக் காப்­பாற்ற இடை­வி­டா­மல் மும்­மு­ர­மான முயற்சிகள் நடப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறினர்.

துருக்­கி­யி­லும் கிரீஸ் நாட்­டி­லும் நேற்­றுக் காலை நில­வ­ரப்­படி 26 பேர் மாண்­டு­விட்­ட­தாக ஊடகத் தகவல்கள் தெரி­வித்தன.

நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து 196 முறை நிலம் அதிர்ந்­த­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறினர். காய­ம­டைந்த நூற்­றுக்­கணக்­கான மக்­கள் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.

நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து சுனாமி ஏற்­பட்டு துருக்­கி­யில் இஸ்­மிர் நக­ருக்­குள் கடல்­நீர் புகுந்து வெள்­ளம் ஏற்­பட்­ட­து.

அந்த வெள்­ளத்­தில் சக்கர நாற்காலி மாது ஒரு­வர் அடித்துச் செல்லப்பட்டு மாண்­டு­விட்­டார்.

நில­ந­டுக்­கம் 7.0 ரிக்­டர் அள­வுக்கு இருந்­த­தாக அமெ­ரிக்க ஆய்வு நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தன.

துருக்கி கடற்­கரை அருகே இருக்­கும் சாமோஸ் என்ற தீவை மைய­மா­கக் கொண்டு வெள்­ளிக்­கி­ழமை நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தா­கத் தெரியவந்தது.

துருக்­கி­யின் இஸ்­மிர் நக­ரில் குறைந்­த­பட்­சம் 13 கட்­ட­டங்­கள் இடிந்து கிடக்­கின்­றன. மேலும் பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ள தாகவும் அதிகாரிகள் கூறினர்.

சுமார் 3 மில்­லி­யன் மக்­கள் வசிக்­கும் துருக்­கி­யின் மூன்­றா­வது ஆக அதிக மக்­கள்­தொகை உள்ள அந்த நக­ரில், 1,200க்கும் அதி­க­மான மீட்­புப் பணி­யி­னர் படா­த­பாடு­பட்டு வரு­கி­றார்­கள். பல மணி நேரங்­க­ளுக்­குப் பிறகு சிலர் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

துருக்­கி­யில் பல பகு­தி­க­ளி­லும் நில­ந­டுக்­கம் உண­ரப்­பட்­டது.

இஸ்­மிர் நக­ரில் இருந்து சுமார் 200 மைல் வட­கி­ழக்கே இருக்­கும் இஸ்­தான்­புல் நக­ரி­லும் நில­ந­டுக்­கம் உண­ரப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் நேற்று தெரிவித்தனர்.

இரு நாடுகளிலும் பயங்கர பேரிடர் நிகழ்ந்ததை அடுத்து கிரேக்க பிரதமரும் துருக்கி அதிபரும் பரஸ்பரம் அனுதாபமும் ஆதரவும் தெரிவித்துக்கொண்டனர்.