துருக்கி நிலநடுக்கம்: 65 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி

துருக்கி நிலநடுக்கம்: 65 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி

1 mins read
99410dde-98f6-4cb2-9060-db2b79369fd0
படம்: ராய்ட்­டர்ஸ் -

இஸ்­தான்­புல்: துருக்­கி­யின் ஏகன் கடல் பகு­தியை வெள்­ளிக்­கி­ழமை அன்று உலுக்­கிய நில­ந­டுக்­கத்­தால் குறைந்­தது 81 பேர் உயி­ர் இ­ழந்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

இடிந்து விழுந்த கட்­ட­டங்­களில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்­கும் பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வர, நேற்று இஸ்­மிர் நக­ரில் உள்ள கட்­டட இடி­பா­டு­க­ளி­லி­ருந்து மூன்று வயது சிறுமி காப்­பாற்­றப்­பட்­டார்.

நில­ந­டுக்­கத்­துக்கு 65 மணி நேரத்திற்குப் பின் மீட்­கப்­பட்­டார் 'எலிஃப்' என்ற அந்த சிறுமி.

சனிக்­கி­ழமை அன்று சிறு­மி­யின் மூன்று சகோ­த­ரர்­களும் தாயா­ரும் மீட்­கப்­பட்­ட­னர். ஆனால் சிறுமியின் ஒரு சகோ­த­ரர் பின்­னர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சுமார் 960 பேர் நில­ந­டுக்­கத்­தில் காய­முற்­ற­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.