சர்ச்சைக்குரிய சட்டத்தில் அதிபர் விடோடோ கையெழுத்திட்டார்

1 mins read
78628dd6-35e8-4869-a799-3bea559df49b
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தோ­னீ­சி­யா­வில் அண்­மை­யில் பெரும் ஆர்ப்­பாட்­டங்­க­ளைக் கிளப்­பிய சர்ச்­சைக்­கு­ரிய தொழி­லா­ளர் சட்­டத்­திற்கு அந்­நாட்டு அதி­பர் ஜோக்கோ விடோடோ ஒப்­பு­தல் அளித்­துள்­ளார்.

மொத்­தம் 1,187 பக்­கங்­க­ளைக் கொண்­டுள்ள இச்­சட்­டம் அக்­டோ­பர் 5ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு இருந்­தது. அந்­தச் சட்­டத்­தில் அதி­பர் விடோடோ நேற்று கையெ­ழுத்­திட்டு ஒப்­பு­தல் அளித்­தார்.

அவர் அதில் கையெ­ழுத்­தி­டா­விட்­டா­லும் அது நிறை­வேற்­றப்­பட்ட 30 நாட்­களில் அது தானா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கும்.

என்­றா­லும், இந்­தச் சட்­டத்­தில் திரு விடோடோ கையெ­ழுத்­திட்டு இருப்­பது, அதன் மீது அவர் கொண்­டி­ருக்­கும் கடப்­பாட்­டைக் காட்­டு­வ­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்­தத் தொழி­லா­ளர் சட்­டம் தங்­க­ளது உரி­மை­க­ளைப் பறிப்­ப­தா­க­வும் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­க­வும் ஊழி­யர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னர்­கள் கூறி வரு­கின்­ற­னர்.