துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், சுமார் 91 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று (நவம்பர் 3) மற்றொரு சிறுமி காயங்களின்றி, உயிருடன் மீட்கப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை (நிலநடுக்கம் நிகழ்ந்து சுமார் 65 மணி நேரத்துக்குப் பிறகு) 3 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டதற்கு அடுத்த நாளில் இந்தச் சிறுமி மீட்கப்பட்டுள்ளது.
துருக்கியின் மேற்கு மாகாணமான இஸ்மிரில் கடந்த வெள்ளிக்கிழமை நேர்ந்த பலத்த நிலநடுக்கத்தில் சுமார் 115 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முற்றிலும் சிதிலமடைந்த ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்பின் இடிபாடுகளுக்கிடையே சிறுமியின் அழுகுரலைக் கேட்ட மீட்புப் படையினர், சில மணி நேரத்துக்குள் அந்தச் சிறுமியை மீட்டனர்.
மண், தூசி படிந்த நிலையில் சிறுமியை மீட்ட மீட்புப் பணியாளர், சிறுமியைக் கட்டியணைத்து, அன்புடன் முத்தமிட்டார்.
சுமார் 4 வயதாகும் அந்தச் சிறுமிக்கு காயம் ஏதுமில்லை. துணி துவைக்கும் இயந்திரத்துக்குப் பின்னால் அந்தச் சிறுமி இருந்ததால் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
“சிரித்துக்கொண்டே, எங்களுக்காக காத்திருந்தார் சிறுமி,” என்று லெவென்ட் ஓனர் எனும் மீட்புப் பணியாளர் குறிப்பிட்டார்.
ஆனால், மீட்புப் பணியைத் தொடர்ந்த அதிகாரிகள், அய்டாவின் தாயாரின் சடலத்தைத்தான் மீட்க முடிந்தது.
இந்த நிலநடுக்கத்தில் 1,026 பேர் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்கு நகரமான வானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த பெரிய நிலநடுக்கம் என இது கூறப்படுகிறது.