தன்னை கொரோனா தொற்றிவிட்டதாக நினைத்த 48 வயது இந்தோனீசிய ஆடவர் ஒருவர், அதனால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்தார்.
அப்போது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எட்டு வயது மகளையும் கொன்றுவிடுவது என திடீரென முடிவுசெய்த அவர், அதன்படி மகளைக் கழுத்தை நெரித்தார்; பின்னர் தன் மணிக்கட்டை அறுத்து, அவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
இஜி என அழைக்கப்படும் அவர் விழுந்து கிடந்ததைக் கண்ட அண்டை வீட்டார் போலிசுக்குத் தகவல் அளித்தனர்.
போலிஸ் வந்து பார்த்தபோது, தந்தை-மகள் இருவரும் உயிருடன் இருந்ததாகவும் ஆனாலும் மருத்துவமனைக்குச் செல்லுமுன் அச்சிறுமி இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
தன் மகளுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால் அவளையும் நிச்சயம் கொரோனா தொற்றியிருக்கும் என நினைத்து, அந்த ஆடவர் அவ்வாறு செய்ததாக போலிஸ் தெரிவித்தது.