தன்னை கொரோனா தொற்றியதாக நினைத்து மகளைக் கொன்ற தந்தை

தன்னை கொரோனா தொற்றிவிட்டதாக நினைத்த 48 வயது இந்தோனீசிய ஆடவர் ஒருவர், அதனால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்தார்.

அப்போது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எட்டு வயது மகளையும் கொன்றுவிடுவது என திடீரென முடிவுசெய்த அவர், அதன்படி மகளைக் கழுத்தை நெரித்தார்; பின்னர் தன் மணிக்கட்டை அறுத்து, அவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இஜி என அழைக்கப்படும் அவர் விழுந்து கிடந்ததைக் கண்ட அண்டை வீட்டார் போலிசுக்குத் தகவல் அளித்தனர்.

போலிஸ் வந்து பார்த்தபோது, தந்தை-மகள் இருவரும் உயிருடன் இருந்ததாகவும் ஆனாலும் மருத்துவமனைக்குச் செல்லுமுன் அச்சிறுமி இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

தன் மகளுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால் அவளையும் நிச்சயம் கொரோனா தொற்றியிருக்கும் என நினைத்து, அந்த ஆடவர் அவ்வாறு செய்ததாக போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!