அமெரிக்கா: நூறாயிரம் பேருக்கு மேல் தொற்று

அமெரிக்கா: நூறாயிரம் பேருக்கு மேல் தொற்று

1 mins read
230d0705-3788-4e4f-a3e8-e4879aa6a925
படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்­கா­வில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வாக நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் குறைந்­தது 102,591 பேருக்கு மேல் கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது.

பல மாநி­லங்­க­ளி­லும் மருத்­து­வ­மனை­களில் கொரோனா நோயாளி­கள் அதிகளவில் அனு­ம­திக்­கப்­பட்டு வரு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.

கொல­ராடோ, ஐடஹோ, மெய்ன், மிச்­சி­கன், இண்­டி­யானா, ரோட் ஐலண்ட், மின­சோட்டா, வாஷிங்­டன், விஸ்­கான்­சின் ஆகிய மாநி­லங்­க­ளி­லும் கொரோனா தொற்று புதிய உச்­சத்­தைத் தொட்­டது.

அதி­பர் தேர்­த­லுக்கு மறு­நா­ளான நேற்று முன்­தி­னம் மட்­டும் கிருமித் தொற்­றால் 1,100க்கும் மேற்­பட்ட உயி­ரி­ழப்­பு­கள் பதி­வா­கின.

வாக்கு எண்­ணிக்­கை­யின்போது காணப்­பட்ட பதற்­ற­மான சூழல், கொரோனா பாதிப்­பின் தீவி­ரத்­தன்­மையை மறைத்­து­விட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இப்­போது அமெ­ரிக்­கா­விலுள்ள மருத்­து­வ­ம­னை­களில் கொரோனா தொற்­றால் 50,000க்கும் மேற்­பட்­டோர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த மூன்று மாதங்­களில் இதுவே ஆக அதி­கம் எனக் கூறப்­ப­டு­கிறது.

வடக்கு டக்­கோட்டா மாநி­லத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் ஆறு படுக்­கை­கள் மட்­டுமே காலி­யாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தெற்கு டக்­கோட்டா மாநி­லத்­தில், பரி­சோ­தனை மேற்­கொண்­டோ­ரில் பாதிப் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறு­தி­யா­னது. அயோவா, வயோ­மிங் மாநி­லங்­களில் இவ்­வி­கி­தம் 40 விழுக்­கா­டாக இருக்­கிறது. குறிப்­பாக, மத்­திய மேற்கு வட்­டா­ரத்­தில் இப்­போது கொரோனா தாக்­கம் அதி­க­மாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் 30ஆம் தேதி அமெ­ரிக்­கா­வில் 100,233 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­னதே முந்­தைய உச்­ச­மாக இருந்­தது.

அமெரிக்காவில் இது­வரை கிட்டத்தட்ட 9.5 மில்­லி­யன் பேரை கொரோனா தொற்றிவிட்டது. அதனால் 233,000க்கும் மேற்­பட்­டோர் இறந்துவிட்டனர்.